Saturday, May 19, 2007

^^^^^^^^ அப்பா துணை ^^^^^^^^

03/06/2007.
என் இனிய அப்பாவுக்கு..

நலமா?...

சூரியனில் மழை போல் - உன் அன்பு,
இதய தேசத்தில்
இறுகி கிடக்கிறது.

சிக்கனம் - உனக்கு
நாங்கள் வைத்த பெயர்.
இருந்தும்,
என்றும் வைத்ததில்லை குறை.

எஙகளை
பேணி வளர்ப்பதில்
நீ தீவிரமாய் இருக்க,
உன்னை
பிணி வளர்த்தது
தெரியவில்லை.

இப்படி உடுத்திகொள்-
என்ற காலத்திலும்,
அழகாய் சொன்னாய்...
தான் முழுமையான தந்தையாய்
எதுவும் செய்யவில்லை என்று.

தகப்பனாய் தன்னையே தந்தாய்,
பாசப்போட்டியில்
நீயே முதலிடம் - ஆனால்
வேண்டுமென்றே பெறுவாய் இரன்டாவதிடம்.

எங்களின் சந்தோஷம்,
உனது சுமை.
உனது சந்தோஷமும்
அதுவே...!!


வாழ்த்தி விடை கொடுத்தாய்.
எட்டு நாட்கள். - ஒரு நேர்முக தேர்வு.
திரும்பினால் ,...

எப்படி முடிந்தது உன்னால்???
என்னை விட்டு ஏன் செத்து போனாய்..??
உன்னை எஙகள் குழந்தையாய் பார்க்கும் காலத்தில்.

நிச்சயமாய் தெரியும்,
உன் விருப்பமில்லாமல் தான்
நீ அழைக்கபட்டிருக்கிறாய்...!!!

இதோ,
எங்களது
சுமையும், சந்தோஷமும்
உன் கனவு ஒன்றே...!!!


இறைவா...
உனனை புரிந்துகொள்ள ஞானமில்லை,.
இதுதான் உன் நியதி என்றால் -
தயவு செய்து (மரியாதையாய்) உன் படைப்பை நிறுத்து.


உன் நிழலில்,
5 வருடங்களாய்....

- சீனிவாசன் ஆளவந்தார்.

4 comments:

Anonymous said...

nice one ... nice haunch , since its ur own story... very nice presentation!!!!

Anonymous said...

nice one ... nice haunch , since its ur own story... very nice presentation!!!! -karth

Unknown said...

its rellay very Nice

padma said...

Dont mistake me for saying ths,Surely ur father will born as your child and enjoy ur love for him...I am praying to god,surely he will do it...